WhatsApp Channel
சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னக்கருப்பு காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்நிலையில் இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடந்து கொண்டிருந்தது.
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை கலெக்டர் சங்கீதா, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக 1,412 மாடுபிடி வீரர்கள், மொத்தம் 3,677 காளைகள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். 1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி மதுரை பொடும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பிடித்துள்ளார். 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பாலமேட்டில் முதல் பரிசை வென்ற பெருமை பொதும்பு பிரபாகரனுக்கு உண்டு.
மேலும், 11 காளைகளை அடக்கி சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 2ம் இடமும், 8 காளைகளை பிடித்து கொந்தகை பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் 3ம் இடமும் பெற்றனர். முதலில் நிற்கும் பிரபாகரனுக்கு தமிழக அரசு கார் பரிசாக வழங்கப்படும்.
சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னக்கருப்பு காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது. காளையின் உரிமையாளருக்கும் தமிழக அரசு பரிசாக கார் வழங்கப்படும்.
42 பேர் காயம்:
பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கும் வீரர்கள், 9 காளை உரிமையாளர்கள், 16 பார்வையாளர்கள், 3 காவலர்கள் உள்பட 42 பேர் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post