WhatsApp Channel
தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ.க.வும், பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
லோக்சபா தேர்தலில் போட்டியிட, பா.ஜ.கவுடன் பா.ம.க, கூட்டணி அமைத்துள்ளது என அறிவித்தார். பா.ம.க திண்டிவனம் அடுத்த தைலாபுரம் கார்டனில் நடைபெற்றது. உயர்நிலைக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தேச நலன், மக்கள் நலன், பா.ம.கவின் எதிர்காலம் கருதி, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஒப்பந்தம் கையெழுத்தானபோது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக உறுப்பினர்கள் உடன் இருந்தனர். நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Discussion about this post