WhatsApp Channel
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.கக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பா.ம.க கூட்டணி சேரும் என கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, பா.ஜ.க கூட்டணி சேர்ந்தது.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியலை கூட்டணி கட்சிகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பா.ம.கவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர தமிழக பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதே நேரத்தில் பாஜகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. எம்எல்ஏ அருள் நேற்றுமுன்தினம் சென்னையில் அவரை சந்தித்தார். இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க இணையும் என தகவல் வெளியானது. ஆனால் திடீர் திருப்பமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க இணைந்தது. கூட்டணி ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. பா.ம.கவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க பாஜக முன்வந்துள்ளது. எந்தெந்த தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அண்ணாமலை.
இதனிடையே பாஜக பா.ம.க கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி விழுப்புரம், சிதம்பரம், மத்திய சென்னை, திண்டுக்கல், தர்மபுரி, கடலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்பதூர், சேலம் ஆகிய தொகுதிகளில். பா.ம.க போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
Discussion about this post