கூவத்தூரில் எங்களுக்கு ஊத்திக் கொடுத்தார் டி.டி.வி.தினகரன். மது ஊத்திக் கொடுப்பது தான் அவர் தொழில்,ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுத்தவர் அவர் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘’நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து, மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு, வானுக்கும், மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
பதவி வெறி படுத்தும்பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்’’என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து… (1/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 11, 2021
Like this:
Like Loading...
Related
Discussion about this post