WhatsApp Channel
அறநிலையத்துறையின் 20 மண்டலங்களில் இருந்து தலா 15 பேர் என மொத்தம் 300 பேர் ஆன்மிக பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு 300 பேர் ஆன்மிக பயணமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அதற்கான செலவை ரூ.75 லட்சம் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்து அறநிலையத்துறையின் 20 மண்டலங்களில் தலா 15 பேர் என மொத்தம் 300 பேர் ஆன்மிக பயணம் செல்ல தேர்வு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் தொடர்புடைய இணைப்புகளை அதே அலுவலகத்திற்கு நவம்பர் 20 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
வேட்பாளர் இந்து மதம், இறை நம்பிக்கை உடையவராகவும் 60 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆன்மீக பயணத்திற்கு தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Discussion about this post