WhatsApp Channel
உலக கோப்பை தொடரில் இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் லீக் ஆட்டம் வரும் 5ம் தேதி நடக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வீழ்த்தியது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி டி காக் (114), வான் டெர் டுசென் (133) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதைத் துரத்திய நியூசிலாந்து தொடக்கம் முதலே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33.5 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேலும் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி தென்னாப்பிரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்ரிக்கா அடுத்த 5ம் தேதி இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இதற்கு முன் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதால், இம்முறையும் வெற்றி பெறுவோம் என தென் ஆப்ரிக்க வீரர் வான் டெர் டியூசன் சவால் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது;- “இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது பெரிய போட்டி. இந்திய அணியில் நிறைய அனுபவங்கள் உள்ளன. குறிப்பாக அவர்கள் சிறந்த பந்துவீச்சு மற்றும் பேட்டிங் வரிசையாக இருப்பதால், அனைத்தும் நிறைவாக உள்ளன.
ஆனால், இந்தியாவுக்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தால், வலுவான நிலையை எட்ட முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த ஆட்டத்தில் நிச்சயம் மிகப்பெரிய சவாலும் அழுத்தமும் இருக்கும். நாமும் அதையே எதிர்பார்க்கிறோம். இதற்கு முன்பு நாங்கள் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி அவர்களை தோற்கடித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
Discussion about this post