WhatsApp Channel
திருப்பதி ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வைணவக் கோயிலாகும். இந்தியாவின் மிக முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று. வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் திருவரங்கத்திற்குப் பிறகு இரண்டாவது தலமாக இத்தலம் கொண்டாடப்படுகிறது. இங்கு வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. நாளை அதாவது 19ம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மே மாதத்திற்கான நிதி சேவை டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது.
இதேபோல், மெய்நிகர் சேவை டிக்கெட்டுகளை 22 ஆம் தேதி வழங்கும். 23ம் தேதி காலை 10 மணிக்கு அங்கபிரதக்ஷணம் டோக்கன்கள் வெளியிடப்படும். அன்று காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி டிக்கெட் மே கோட்டாவை வெளியிடும். எனவே, திருப்பதிக்கு செல்ல விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Discussion about this post