WhatsApp Channel
பிப்ரவரி 19 ஆம் தேதி, பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் ஸ்ரீ கல்கி தாம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19-ம் தேதி உத்தரபிரதேசம் செல்கிறார். காலை 10:30 மணிக்கு சம்பல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கல்கி தாம் கோவிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஸ்ரீ கல்கி தாம் கோயிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இந்த விழாவில் ஸ்ரீ கல்கி தாம் நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கலந்து கொள்கிறார்.
பிற்பகல் 1:45 மணிக்கு, பிப்ரவரி 2023 இல் உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 (UPGIS 2023) இன் போது பெறப்பட்ட முதலீட்டு திட்டங்களுக்கான நான்காவது அடிக்கல் நாட்டு விழாவில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான 14000 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இந்தத் திட்டங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி & ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு, கல்வி போன்ற துறைகளுடன் தொடர்புடையவை. இதில் தொழிலதிபர்கள், உலக மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தூதர்கள், சிறப்பு விருந்தினர்கள் என 5000 பேர் பங்கேற்கின்றனர்.
Discussion about this post