WhatsApp Channel
ஜெர்மனியின் முனிச் நகரில் பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சந்தித்தது.
ஜெர்மனியின் முனிச் நகரில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். உலகம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் குறித்து உயர்மட்ட விவாதங்களை நடத்த இந்த மாநாடு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். சர்வதேச மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். கடந்த 16ம் தேதி தொடங்கிய சர்வதேச பாதுகாப்பு மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மாலிக்குடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மாலிக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் போஸ்டில் தெரிவித்துள்ளார். காசா நகரின் தற்போதைய நிலைமை குறித்து நான் விவாதித்தேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post