WhatsApp Channel
சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. சபரிமலை அய்யப்பன் கோயில் தென்னிந்தியாவில் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ரன்னி-பெருநாடு பகுதியில் சபரி மலையின் உச்சியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரத்தில் மலை உச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் வருடத்தில் 127 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். பம்பாய் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும் என்பதால், வனப்பகுதியில் உள்ள கடினமான பாதைகள் வழியாக கோயிலுக்கு செல்ல வேண்டும். இதனை முன்னிட்டு பக்தர்கள் இருமுடி கட்டி இக்கோயிலுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், பங்குனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் 13ம் தேதி திறக்கப்பட உள்ளது. பங்குனி மாத பூஜை மார்ச் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. பங்குனி ஆராட்டு திருவிழா வரும் 16ம் தேதி துவங்குகிறது.
ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் பக்தர்களின் நலன் கருதி நிலக்கல் மற்றும் பம்பையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
AthibAn Tv WHATSAPP சேனலில் இணைய
வாட்ஸ்அப் சேனல் மூலம் இணையும் போது உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, Green பட்டனை தொடவும் .
மேலும் தந்திச் செய்தி மூலம் முக்கிய தகவலுக்கு Red பட்டனை தொடவும்.
Discussion about this post