WhatsApp Channel
இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற இந்திய உலக அமைப்பின் வருடாந்திர முதலீட்டு உச்சி மாநாடு (NXT10) -ல் உரையாற்றினார்.
அப்போது பேசிய அமித்ஷா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், 2047ல் இந்தியாவின் வளர்ச்சியை நிர்ணயிக்கும். இந்த தேர்தல்கள் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஏழைகளின் நலன், பொது நலன், பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான திருவிழாவாகும்.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா இன்று தன்னிறைவு மற்றும் தன்னம்பிக்கையை நோக்கி நகர்கிறது. ஒரு செயலற்ற நிலையில் இருந்து, இந்தியாவில் இப்போது துடிப்பான அரசாங்கம் உள்ளது. முற்போக்கான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. பலவீனமான பொருளாதாரத்தில் இருந்து வலுவான பொருளாதாரத்திற்கு இந்தியா நகர்கிறது என்றார்.
AthibAn Tv WHATSAPP சேனலில் இணைய
வாட்ஸ்அப் சேனல் மூலம் இணையும் போது உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, Green பட்டனை தொடவும் .
மேலும் தந்திச் செய்தி மூலம் முக்கிய தகவலுக்கு Red பட்டனை தொடவும்.
Discussion about this post