WhatsApp Channel
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் வகையில், என்னைச் சந்திக்க டெல்லி வந்த தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்; ஆனால், கூட்டணியில் சேர்க்க முடியாது என பிரதமர் மோடி பகிரங்கமாக கூறிவிட்டார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களில் 2வது முறையாக அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிஜாமாபாத் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தெலுங்கானா மக்கள் நிஜாம் ஆட்சியை நினைவில் கொள்ள வேண்டும்… நாடு சுதந்திரம் பெற்ற போது ஐதராபாத் மற்றும் இந்த பகுதிகள் அனைத்தும் சுதந்திரமாக இருக்கவில்லை. அப்போது நிஜாம் பல்வேறு தடைகளை வைத்தார். ஆனால் குஜராத் மண்ணின் தலைவரான சர்தார் வல்லபாய் படேல் தனது பலத்தால் நிஜாமாபாத் மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்தார். குஜராத்தைச் சேர்ந்த மற்றொருவர், உங்கள் வளர்ச்சிக்காக நான் இங்கு வந்துள்ளேன்.
தெலுங்கானா ரூ. 8000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வழங்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த திட்டங்களில் அதிநவீன NTPC ஆலையும் அடங்கும், இது தெலுங்கானாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பாலானவை தெலுங்கானா மக்களால் பயன்படுத்தப்படும்.
கடந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பாஜகவின் ஆதரவு தேவைப்பட்டது. அவர் என்னை விமான நிலையத்தில் சந்திப்பார். இப்போது அதை நிறுத்திவிட்டார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு டெல்லி வந்த கேசிஆர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் கூறினார். ஆனால் அவரது நடவடிக்கைகளுக்கு எங்களால் ஒத்துழைக்க முடியாது என்று தெரிவித்துவிட்டேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
தெலுங்கானா மாநிலத்திற்கு பிரதமர் மோடி தொடர்ந்து வருகை தருகிறார். பிரதமர் மோடியை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கடந்த 6 முறை நேரில் சென்றும் வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post