WhatsApp Channel
ஜாதி வாரியாக கணக்கெடுக்காமல் சமூக நீதி முழுமையடையாது என்று தி.மு.க. அரசு உணர வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
பீகார் மாநிலம் போல் தமிழகத்திலும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று அமு பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவினருக்கும் போதிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தலாம் என்பது பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 57வது வாக்குறுதியில் கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும், அடுத்து வந்த திமுக ஆட்சியிலும் ஜாதி வாரியாக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் முறைகளை ஆராய நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் உரிய கால அவகாசத்தை நீட்டிக்காததால் அந்த ஆணையமும் செயலிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் நியாயமான முறையில் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசரமாக தேவைப்படுகிறது.
எனவே, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்பதை உணர்ந்து, தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, பீகாரைப் போல் தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post