WhatsApp Channel
சென்னையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சந்திப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி நிரந்தரக் கூட்டணி கிடையாது என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மருது அகுராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் நிலைப்பாடு மற்றும் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post