WhatsApp Channel
தமிழகத்தில் உள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, தமிழக கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து, கோவில்களின் சொத்து மற்றும் வருமானத்தை அபகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
அதேநேரம், தென்னிந்திய மாநில அரசுகள் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்து கோவில்களில் மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், கோயில்களை மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்றும் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, தமிழகத்தில் கூட்டணி கட்சியான திமுகவிடம் இருந்து கோயில்களை விடுவிக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்றும் கேள்வி எழுப்பினார்.
Discussion about this post