WhatsApp Channel
தனியார் ஆன்லைன் செய்தி ஊடக நிறுவனமான ‘நியூஸ் கிளிக்’ டெல்லியில் சிறப்புப் பிரிவு போலீஸாரால் சீல் வைக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ஆன்லைன் செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் அலுவலகத்தில் டெல்லி போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
அலுவலகம் தவிர, அதில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உட்பட 30 இடங்களில் டெல்லி, நொய்டா, காசியாபாத் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன், ‘நியூஸ் கிளிக்’ என்ற ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால், அவர் யெச்சூரி வீட்டில் தங்கியிருந்ததால், சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது நிறுவன ஊழியர்களின் மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 38.05 கோடி பணம் பெற்றதாக மீடியா நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அதன் அடிப்படையில் டெல்லி போலீசார் சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட பணம் பெற்றதாக கூறி டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் மீடியா நிறுவனத்துக்கு இன்று மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக நிறுவனத்திற்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்திய எதிர்க்கட்சிக் கூட்டணி, ரெய்டுகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
கூட்டணி அறிவித்துள்ளதாவது:
மக்களுக்கு உண்மையை விளக்குபவர்களுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து வேலை செய்கிறது. வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. தொழிலதிபர்கள் தாங்கள் விரும்பும் ஊடகங்களை கைப்பற்றுவதற்கு இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் தவறுகளை புள்ளி விவரங்களுடன் ஊடகங்கள் அலசுவதையும் அறிக்கை செய்வதையும் இந்த அரசாங்கம் தடுக்க விரும்புகிறது.
உலக அரங்கில் முதிர்ந்த ஜனநாயக நாடாகக் கருதப்பட்ட இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையப் போகிறது. பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பஜார், பாரத் சமாச்சார் மற்றும் வயர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் வரிசையில் நியூஸ்க்ளிக் இணைகிறது.
இதனை எதிர்க்கட்சி கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், நியூஸ் கிளிக் பத்திரிகைக்கு ஆதரவாகவும் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கமும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.
Discussion about this post