WhatsApp Channel
வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 20ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 19ம் தேதி வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post