WhatsApp Channel
தொடர் கனமழை காரணமாக திப்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்யாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர் மழை காரணமாக தில்பரப்பு அருவியில் 4வது நாளாக இன்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தில்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தினமான இன்று காலை முதலே இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வெள்ளம் குறித்து நகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை தாண்டி உயர்ந்து வருவதால், வெள்ள அபாயத்தை தடுக்க பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கோட்டையாறு, குளித்துறை, தாமிரபரணியாறு கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post