WhatsApp Channel
இந்திய ஆசிய பாரா விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தியாவின் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வீரர்களுடன் அவர் இன்று கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: அரசின் அணுகுமுறை விளையாட்டு வீரர்களை மையமாக கொண்டது. விளையாட்டு கலாச்சாரத்தில் இந்தியா வளர்ந்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியா முன்னேற தன்னம்பிக்கை பெற்றுள்ளது என்றார்.
2030 யூத் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
Discussion about this post