WhatsApp Channel
ஆவணங்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அகதிகள், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தொடர்ந்த வன்முறைக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் போர்க்களமாக மாறியுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். வாழ்க்கைச் செலவு, கட்டுப்பாடு தளர்வு போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் பாகிஸ்தானைத் தேடி வந்தனர்.
இதுவரை, 1.3 லட்சம் ஆப்கானியர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு பாகிஸ்தானில் தங்குவதற்கான அந்தஸ்தைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 20 லட்சம் பேர் பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.
தற்போது பாகிஸ்தானில் பொருளாதார பற்றாக்குறை நிலவுகிறது. பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் தலிபான்களுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளை நவம்பர் 1 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டது. தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கடந்த ஒரு மாதத்திற்குள் எண்ணற்ற ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறினர். அவர்களில் பலர் அங்கு தங்கினால் கைது செய்யப்படுவோம் என அஞ்சுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அகதிகளை பாகிஸ்தான் வீரர்கள் நாடு கடத்துகின்றனர்.
இந்நிலையில், எந்த ஆவணமும் இல்லாத ஆப்கானிஸ்தான் அகதிகள், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதன்படி ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கராச்சி, ராவல்பிண்டி, கைபர் பக்துன்க்வா மாகாணம், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேறுகின்றனர்.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு ஐநா அமைப்பும், உலக நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில், உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 1,00,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் கைபர் பக்துன்க்வாவில் உள்ள டோர்காம் எல்லைக் கடப்பிலிருந்தும் பலுசிஸ்தான் மாகாணங்களில் உள்ள சாமன் கடப்பிலிருந்தும் தானாக முன்வந்து தங்கள் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
Discussion about this post