WhatsApp Channel
சுரங்கப்பாதை யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகர் வரை யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சில்க்யாரா-தண்டல்ஹான் பகுதியை இணைக்கும் வகையில் மலைப்பகுதியில் 4 கி.மீ., சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இதில், 40 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, முதல் 150 மீட்டர் சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 40 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களின் நிலை என்ன? இன்னும் தெரியாத நிலையில் மீட்பு பணி வேகமாக நடந்து வருகிறது.
Discussion about this post