WhatsApp Channel
சுரங்கப்பாதை விபத்து, இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பணியின் போது விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ. நீளமான இந்த சுரங்கப்பாதையில் 200 மீட்டர் சரிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை 21 மீட்டர் இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 35 மீட்டர் இடிபாடுகள் அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களைத் தொடர்பு கொண்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவுகளை அனுப்பி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post