WhatsApp Channel
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம், வாட்ஸ்அப் தகவலின்படி, போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.27 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (15ம் தேதி) நடக்கிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜே.ஜே. போலீஸ் நிலைய அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மலாடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்த ஆகாஷ் கோத்தாரியை பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில், பல்வேறு குழுக்களுக்கு அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் தகவலின்படி, போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.27 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
டிக்கெட்டுகள் உண்மையான விலையை விட 4 முதல் 5 மடங்குக்கு விற்கப்படுகிறது.
இதன் காரணமாக அவர் மீது மோசடி மற்றும் பிற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர் டிக்கெட்டுகளை எங்கே வாங்கினார்? இந்த மோசடியில் அவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post