WhatsApp Channel
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது.
கடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி, பின்னர் பாஜகவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதேபோல், பாஜகவும் கைப்பற்றிய ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஷாஜாபூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
கடந்த சில நாட்களாக மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை சந்தித்து ஆசி பெற்றேன். பாஜக மீது அவர்கள் காட்டும் நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் அமர்ந்து கணக்கீடுகளைச் செய்தும் கருத்துக் கணிப்பாளர்களால் அவர்களின் மதிப்பீடுகளை ஆராய முடியவில்லை.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக புயல் அமோக மக்கள் ஆதரவால் காங்கிரஸை வேரோடு பிடுங்கி எறியும். எங்கள் மீதான உங்கள் அன்பு பலரின் தூக்கத்தைக் கெடுக்கிறது. காங்கிரஸ் எங்கு வந்தாலும் பேரழிவு ஏற்படும். காங்கிரஸின் சுரண்டலை யாராலும் மறக்க முடியாது. மிகவும் சிரமப்பட்டு படுகுழியில் இருந்த மத்திய பிரதேசத்தை பாஜக மீட்டுள்ளது என்றார்.
Discussion about this post