WhatsApp Channel
காசாவின் ஹமாஸ் அமைப்பின் மையங்களை பொதுமக்கள் சூறையாடுகின்றனர் என்றார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாத காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள அல்-ஷீபா என்ற பெரிய மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இதனால், அந்த மருத்துவமனையில் மருத்துவ சேவை வழங்கப்படவில்லை. இதனால், சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
இஸ்ரேல் ராணுவத்தினர் மருத்துவமனையை நான்கு பக்கமும் சுற்றி வளைத்துள்ளனர். 400 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 20 ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மருத்துவமனை வளாகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் ஐசியூ மற்றும் ஆக்சிஜன் கருவிகளின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, 7 குழந்தைகள் மற்றும் 27 நோயாளிகள் இறந்துள்ளனர் என்று ஹமாஸின் துணை சுகாதார அமைச்சர் யூசுப் அபு ரிஷ் தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியில், காஸா மீதான கட்டுப்பாட்டை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இழந்துள்ளது. பயங்கரவாதிகள் தெற்கு நோக்கி தப்பியோடி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பின் மையங்களை பொதுமக்கள் சூறையாடுகின்றனர் என்றார். எனினும், இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. ஹமாஸ் அரசின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.
Discussion about this post