WhatsApp Channel
டிரம்மில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இரசாயனங்கள் தீப்பிடித்து கட்டிடம் முழுவதும் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரின் நம்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.
இந்த சம்பவத்தில் பலர் மூச்சு திணறி உயிரிழந்தனர். பலர் சுயநினைவை இழந்தனர். இதில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பெண்களும் 4 பெண்களும் அடங்குவர்.
21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் டிரம்மில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரசாயனங்கள் தீப்பிடித்து கட்டிடம் முழுவதும் பரவியதாக போலீசார் கூறுகின்றனர்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
Discussion about this post