WhatsApp Channel
பிரதம மந்திரியின் இலவச உணவு தானிய திட்டம் 2020 இல் கொரோனா தொற்றுநோய்களின் போது தொடங்கப்பட்டது.
பிரதமரின் ஏழை உணவுத் திட்டம் உலகின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றாகும். பிரதமரின் ஏழை உணவுத் திட்டம் 81.35 கோடி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையும் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 11.80 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ், பயனாளிகள் நாட்டில் உள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான நியாய விலைக் கடைகளில் அரிசி, கோதுமை மற்றும் சிறுதானியங்கள் போன்ற இலவச உணவு தானியங்களை தொடர்ந்து வாங்கலாம்.
உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் நிதி நெருக்கடியைக் குறைக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோய் காலத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் இலவச உணவு தானியத் திட்டம் 2023 டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post