WhatsApp Channel
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 6 நாள் போர் நிறுத்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீடித்த 2 நாள் போர் நிறுத்தம் நேற்றுடன் முடிவடைந்தது. எனினும் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், மனிதாபிமான அடிப்படையில் மேலும் 2 நாட்களுக்கு போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்களாக செயற்படும் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இன்று (வியாழக்கிழமை) காலை நீடிக்கப்பட்டுள்ள 2 நாள் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டால் மேலும் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த 2 நாள் தவிர மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேல் தரப்பு விரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், காஸா பகுதியில் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட ரஷ்ய குடியுரிமையுடன் இரண்டு பணயக்கைதிகள் ரபா கடவுப்பாதை வழியாக எகிப்தை வந்தடைந்ததாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தால் அடையாளம் காணப்பட்ட 50 வயதான யெலினா ட்ரூபனோவ் மற்றும் 73 வயதான இரேனா டாட்டி ஆகிய இரு பெண்களும் ரஷ்யர்களுக்குப் பிறகு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸால் ஒப்படைக்கப்பட்டதாக பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு தெரிவித்துள்ளது.
Discussion about this post