WhatsApp Channel
இந்த ஒப்பந்தம் நாட்டின் வடகிழக்கு பகுதியிலும் குறிப்பாக மணிப்பூரில் அமைதியின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3ம் தேதி முதல் மேதி மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இது கலவரமாக வெடித்ததால், கடந்த 7 மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஆயுதக் குழுக்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இந்நிலையில் மணிப்பூரில் ஆயுத மோதலை எதிர்த்து போராடி வரும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற ஆயுதக் குழு டெல்லியில் நேற்று மத்திய அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் நாட்டின் வடகிழக்கு பகுதியிலும் குறிப்பாக மணிப்பூரில் அமைதியின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் கூறுகையில், மணிப்பூரில் வன்முறையை கைவிட்டு தேசிய நீரோட்டத்திற்கு திரும்ப ஆயுதமேந்திய குழு ஒன்று ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை. மணிப்பூரின் ஆயுதக் குழுவான UNLF, டெல்லியில் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மணிப்பூர் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையில் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் இது ஒரு மைல்கல் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது X சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். ஆயுதக் குழுக்கள் ஜனநாயக நடைமுறைக்கு மாறுவது வரவேற்கத்தக்கது. ஜனநாயக செயல்முறைகளுக்கு திரும்புவது மற்றும் வளர்ச்சிக்கான பாதையில் UNLF. அமைப்பு வருவதும் வரவேற்கத்தக்கது என்றார்.
Discussion about this post