WhatsApp Channel
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடந்தது.இதை தொடர்ந்து செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் நடந்தது.இதையடுத்து, பார்லிமென்ட் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. 19 நாட்கள் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தொடரில் 18 மசோதாக்கள் உள்ளிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே, இந்தத் தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவை அரசு கோரியுள்ளது. இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நாளை (சனிக்கிழமை) நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post