WhatsApp Channel
தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவைக்கு தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. இதையடுத்து தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் பதவியேற்றார்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கூற்றுப்படி, மாநில எல்லைக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பயணம் செய்ய இலவசம்.
தெலுங்கானா மாநிலத்தின் அனைத்து பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்களும் வயது வித்தியாசமின்றி இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவைக்கு தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவசமாக பயணம் செய்ய விரும்பும் பெண்கள் தங்களுடைய குடியிருப்பு முகவரிக்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் என்றும், அதற்கு ‘ஜீரோ டிக்கெட்’ வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post