WhatsApp Channel
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று, பிப்ரவரி 14, 2024 அன்று ராஜஸ்தானில் உள்ள பெனேஷ்வர் கோவிலில் ராஜஸ்தானின் பல்வேறு சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்களின் கூட்டத்தில் பங்கேற்றார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
இந்தியா தன்னிறைவு பெற உறுதிபூண்டுள்ளது, என்றார். ஒவ்வொரு துறையும் தன்னிறைவு பெற்றால் மட்டுமே இந்தியா தன்னிறைவாக இருக்க முடியும், என்றார்.
தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதற்காக சுய உதவிக் குழுக்களையும் அவர்களுடன் தொடர்புடைய அனைவரையும் அவர் பாராட்டினார். சுய உதவிக்குழுக்கள் நல்ல பணிச்சூழலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மனித வளம் மற்றும் சமூக வளத்தை கட்டியெழுப்புவதில் பாராட்டத்தக்க பணிகளையும் செய்து வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பழங்குடியின சமூகத்திடமிருந்து சமூகத்தின் ஏனைய பிரிவினர் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். பழங்குடி சமூகங்கள் சுயராஜ்யத்திற்கு சிறந்த முன்மாதிரிகளை அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இயற்கையோடு இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்றார். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல் குறைந்த பட்ச வளத்துடன் வாழ அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் கற்றுக்கொள்ளலாம் என்றார்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற கருத்தை செயல்படுத்த ஒட்டுமொத்த சமுதாயமும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
பெண்களிடையே கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும், இதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திலும், உலக முன்னேற்றத்திலும் பெண்களும் சம பங்குதாரர்களாக மாற முடியும் என்றார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்றார். அவர்களின் வெற்றியின் பலத்தில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post