WhatsApp Channel
பெல்ஜியம் வெளியுறவு அமைச்சர் ஹட்ஜா லபீப் உடனான சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜெர்மனியின் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். இந்நிலையில், இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக போலந்து, பெல்ஜியம், போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சக அமைச்சர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
இதில், போர்ச்சுகல் வெளியுறவு அமைச்சர் ஜோவா கிராவினோவுடன் நடந்த சந்திப்பில், அண்மைக்கால உலக முன்னேற்றங்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
அதேபோன்று போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கியுடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இதில் உக்ரைன் போர் குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது.
பெல்ஜியம் வெளியுறவு அமைச்சர் ஹட்ஜா லபீப் உடனான சந்திப்பில், இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையேயான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவரங்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது சமூக வலைதளமான X இல் பகிர்ந்துள்ளார்.கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இந்த பாதுகாப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
உலகம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் குறித்து உயர்மட்ட விவாதங்களை நடத்த இந்த மாநாடு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
Discussion about this post