WhatsApp Channel
ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இரங்கல் செய்தியில், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியின் எண்ணற்ற பக்தர்களுடன் உள்ளன. சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்காக, குறிப்பாக மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்கான அவரது முயற்சிகள், வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பலவற்றில் அவர் ஆற்றிய பணிகளுக்காக அவர் தலைமுறை தலைமுறையாக நினைவுகூரப்படுவார்.
பல ஆண்டுகளாக அவருடைய ஆசிகளைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கடந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர் மாநிலம் டோன்கர்கர் என்ற இடத்தில் உள்ள சந்திரகிரி ஜெயின் மந்திருக்கு சென்றதை என்னால் மறக்க முடியாது. அந்த நேரத்தில், நான் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியுடன் நேரத்தை செலவிட்டேன், மேலும் அவரது ஆசியையும் பெற்றேன்.
இதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகா துறவியும், மிகவும் மதிக்கப்படும் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜின் மறைவு நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார்.
Discussion about this post