WhatsApp Channel
மலேசியாவின் சிலாங்கூரில் ஆசிய அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
காலிறுதியில் ஹாங்காங்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி தாய்லாந்தை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
தாய்லாந்து இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நீண்ட ஓய்வுக்குப் பிறகு இந்தத் தொடரில் இந்திய அணியை பிவி சிந்து வழிநடத்தினார்.
உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள சுபனிதா கெத்தோங்கை 21-12 21-12 என்ற கணக்கில் பி.வி.சிந்து தோற்கடித்தார்.
இதன் மூலம் இறுதிச் சுற்றில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 23-வது தரவரிசையில் உள்ள ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-16 18-21 21-16 என்ற செட் கணக்கில் 10-வது இடத்தில் உள்ள ஜொங்கோல்பன் கிடிதரகுல்-ரவிந்தா பிர ஜோங்ஜோய் ஜோடியை தோற்கடித்தது.
இதேபோல், ஸ்ருதி மிஸ்ரா மற்றும் பிரியா கோன்ஜெங்பாம் ஜோடி 11-21 9-21 என்ற கணக்கில் உலகின் 13வது இடத்தில் உள்ள பென்யாபா ஐம்சார்ட் மற்றும் முண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
இதன் மூலம் இந்தியா, தாய்லாந்து அணிகள் 2-2 என சமநிலை வகித்தன. இறுதியாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் இளம் வீரர் அன்மோல் கர்ப் 21-14 21-9 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 45வது இடத்தில் உள்ள போர்ன்பிச்சா சோய் கிவாங்கை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன், 2016 மற்றும் 2020ல் நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
Discussion about this post