WhatsApp Channel
புதுடெல்லியில் 9வது ரைசினா பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் இந்தியா வர உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் கிரீஸ் பிரதமரின் பயணம். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
15 ஆண்டுகளில் கிரீஸ் பிரதமர் கோஸ்டாஸ் கரமன்லிஸ் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவருடன் மூத்த அதிகாரிகளும் முக்கிய வர்த்தகக் குழுவும் வந்துள்ளனர்.
அவருக்கு ராஷ்டிரபதி பவனில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும். இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள்.
புதுடெல்லியில் 9வது ரைசினா பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விருந்தினர்களுக்கு பிரதமர் மோடி மதிய உணவும் வழங்குகிறார். கிரீஸ் பிரதமர் தாயகம் திரும்பும் முன் மும்பை செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு கிரீஸ் நாட்டின் அப்போதைய பிரதமர் கோஸ்டாஸ் கரமன்லிஸ், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டோரா பகோயானிஸ் உடன் இந்தியா வந்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரீஸ் பிரதமரின் இந்தியப் பயணம் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி கிரீஸ் சென்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் நட்புறவு அதிகரித்துள்ளது.
Discussion about this post