WhatsApp Channel
மக்களவை தேர்தல் தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். இப்போது அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லக்கூடிய பல்வேறு மொழிகள் மற்றும் மதங்கள் இந்தியாவில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்சி செய்வது யார் என்பதை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் தேதியை பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தியாவின் 18வது லோக்சபா தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதற்காக, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் கமிஷனர்கள் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். இப்போது தேர்தல் தேதியை அறிவிப்பார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நாட்டின் ஜனநாயக திருவிழா தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வருகிறது.
தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது. எனவே அதற்குள் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வது அவசியமாகும். இதனால் லோக்சபா தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஜம்மு காஷ்மீர் சென்று அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட கள நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “இன்று மதியம் 3 மணிக்கு, 18வது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேதியை அறிவிக்க டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகமான விஞ்ஞான் பவனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கமிஷனர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள்: லோக்சபா தேர்தலுடன், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். அந்த வகையில் தமிழகத்திலும் காலியாக உள்ள இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
8 கட்டங்களாக தேர்தல்?: 7 அல்லது 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தல் 2019 அறிவிப்பு மார்ச் 10 அன்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள்: தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்கு பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது.வரும் மக்களவை தேர்தலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
Discussion about this post