WhatsApp Channel
டெல்லியின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மதுக் கொள்கை விவகாரத்தில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குனரகம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் தான் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இதையடுத்து, தன்னை கைது செய்ய தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் கைதுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் அமலாக்க இயக்குனரகம் தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டுள்ளது.
கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கக் குழுவில் இப்போது 12 அதிகாரிகள் உள்ளனர், மேலும் அவர்கள் சோதனை வாரண்டுடன் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவராக உள்ள கெஜ்ரிவால், மதுக் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய 8 சம்மன்களைத் தவறவிட்டார். டெல்லி ஜல் போர்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆஜராகுமாறு கடந்த திங்கட்கிழமை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதே மதுக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், டெல்லி முதல்வரின் இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். கெஜ்ரிவாலின் வீட்டில் சில மணி நேரம் சோதனை நடத்திய அமலாக்கத்துறை தற்போது அவரை கைது செய்துள்ளது
Discussion about this post