WhatsApp Channel
நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்டப் போராட்டம் தொடர்கிறது. தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன். களத்தில் நின்று வெற்றி பெற முடிவு செய்துள்ளேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கருத்து வேறுபாடு இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். பல தொகுதிகள் வழங்கப்பட்டாலும் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்.
அவர் கூறியது இதுதான்.
Discussion about this post