WhatsApp Channel
தெருநாய்கள் துரத்தியதால் கீழே விழுந்த தொழிலதிபர் மூளையில் ரத்தக்கசிவால் பலி அடைந்தார்.
வாஹா பக்ரி டீ குழுமம் குஜராத்தைச் சேர்ந்த தேயிலை நிறுவனம். இந்நிறுவனத்தின் உரிமையாளர் பராக் தேசாய் (வயது 49). பராக் தேசாய் தொழிலதிபர் மற்றும் அவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி மாலை அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டின் அருகே பராக் தேசாய் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தெருநாய்கள் பராக் தேசாய்வை விரட்டின.
தெருநாய்களிடமிருந்து தப்பிக்க பராக் தேசாய் வேகமாக ஓடினார். அப்போது, பராக் கீழே விழுந்தார். அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பராக்கை மீட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய்கள் துரத்தும்போது கீழே விழுந்து மூளையில் ரத்தக்கசிவு பராக் தேசாய்க்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பராக் தேசாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பராக் தேசாய் நேற்று மாலை உயிரிழந்தார். மூளையில் ரத்தக்கசிவு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post