WhatsApp Channel
திமுக அரசு மீது உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“திமுக அரசு பதவியேற்றதில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது, காவல்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாஜகவினரை கைது செய்கிறது.
திமுக ஆட்சிக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளிக்க உள்ளோம். பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கும், அவர்களுக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளிக்க உள்ளோம்.
தேசிய தலைமைக்கு நாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகிறது. 4 பேர் கொண்ட குழு வரும் 27ம் தேதி மாலை பாஜக அலுவலகத்துக்கு வந்து கருத்து தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்ட பா.ஜ.க நிர்வாகிகளின் இல்லத்துக்கு மத்திய குழு செல்ல உள்ளது.
நடிகை கவுதமி இன்று காலை கூட என்னிடம் பேசினார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆமை வேகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை ஏமாற்றியவருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கௌதமியுடன் பாஜக நிற்கும். அவர் கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் அவருக்கு தேவையான உதவிகளை பாஜக செய்யும். அவருக்கு எந்த வகையிலும் உதவ தயாராக இருக்கிறேன்,” என்றார்.
Discussion about this post