WhatsApp Channel
தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ரூ.400 கோடி கேட்டு 4 நாட்களில் 3வது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. 20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. பணத்தை தராவிட்டால் முகேஷ் அம்பானியை கொன்று விடுவதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆண்டிலாவின் பாதுகாப்பு அதிகாரி காம்தேவி போலீசில் கொலை மிரட்டல் மின்னஞ்சலில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறுநாள் 200 கோடி கேட்டு இன்னொரு கொலை மிரட்டல் வந்தது. இந்நிலையில் முகேஷ் அம்பானிக்கு 3வது முறையாக இ-மெயிலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை மர்ம நபர் ரூ.400 கோடி கேட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
Discussion about this post