WhatsApp Channel
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கமிடுவது, செருப்பு வீசுவது போன்ற சம்பவங்கள் தேவர் ஜெயந்தி அன்று நடந்திருக்கக்கூடாது. பன்னீர்செல்வம் கூறினார்.
முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். எடப்பாடி பழனிசாமி காரில் ஏற முயன்றபோது, சிலர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதற்கிடையில், அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் கீழே சாய்ந்தன. மேலும் எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டபோது, அவரது கார் மீது சிலர் கற்கள் மற்றும் செருப்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்தனர். கார் மீது கற்கள் மற்றும் காலணிகளை வீசியவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “நான் ஏற்கனவே எனது சமூக வலைதளங்கள் மூலம் அறிவுறுத்தியிருந்தேன்.பசும்பொன்னின் புனித பூமிக்கு யார் வந்தாலும் வரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று குறிப்பிட்டிருந்தேன். அவர்களுக்கு சிரமமோ, துன்பமோ கொடுக்க கூடாது, இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது,” என்றார்.
Discussion about this post