WhatsApp Channel
அமெரிக்க அதிபரின் ஆலோசகர் என்று கூறி மக்களை ஏமாற்றி வந்த நபரை வங்கதேசத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
பங்களாதேஷின் டாக்கா நகருக்கு உட்பட்ட பல்டான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், அமெரிக்க அதிபரின் ஆலோசகர் எனக் கூறி, மக்களுக்கு எதிராக ஒருவர் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர் போலியான அடையாளத்துடன் மக்களை ஏமாற்றுவதில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவர் டாக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடியும் வரை அவரை சிறையில் அடைக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் அலி ஹைதர் பிறப்பித்த உத்தரவின்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மியான் ஜாகிதுல் இஸ்லாம் என்ற அந்த நபர், டாக்கா விமான நிலையத்தில் பங்களாதேஷ் காவல்துறை குடியுரிமைத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தோஹா வழியாக வாஷிங்டனுக்குச் செல்லும் வழியில் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த அமெரிக்கர் என்பது தெரியவந்தது. அமெரிக்காவின் மேரிலாந்தில் வசிக்கிறார். வங்கதேசத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் ஆலோசகர் என்று கூறிய அவர், பங்களாதேஷில் தலைமை மாற்றம் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிடென் உறுதியளித்துள்ளார். ஆனால், டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் இதை மறுத்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது.
Discussion about this post