WhatsApp Channel
மதுரை சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் தோப்பூர் பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
கட்டிட தொழிலாளர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றனர். அவர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டி சென்று பிடித்தனர்.
செல்போன்களை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் கத்தியால் குத்தி தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.
இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post