WhatsApp Channel
மும்பை தீவிரவாத தாக்குதல், பிரித்தானிய எம்.பி.க்கள் கேத்தரின் வெஸ்ட், வீரேந்திர சர்மா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள காந்தி ஹாலில் உள்ள இந்தியா ஹவுஸில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரித்தானிய எம்.பி.க்கள் கேத்தரின் வெஸ்ட், வீரேந்திர சர்மா மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதர் விக்ரம் துரைசாமி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசுகையில், இதுபோன்ற கொடூரமான செயல்களை கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், என்றும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம். அவை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்தியாவின் அணுகுமுறை என்று அவர் வலியுறுத்தினார்.
தீவிரவாத தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க கடந்த பல ஆண்டுகளாக இந்தியா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இவ்வாறான பயங்கரவாதச் செயல்களை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதே உலகிற்கு எங்களின் தெளிவான செய்தியாக இருக்கும் என்றார்.
Discussion about this post