WhatsApp Channel
தமிழகம் முழுவதும் அதிக அளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் பரவுவதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் அதிக காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.
இலவச பஸ்களில் செல்லும் பெண் பயணிகளிடம் ஜாதி உள்ளிட்ட விவரங்களை கேட்டால் பிரச்னை ஏற்படும்; பெண் பயணிகளிடம் ஜாதி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை ஏன் கேட்க வேண்டும்? இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நான் டெல்டா குடிமகன் என்று பிரதமர் சொன்னால் மட்டும் போதாது; டெல்டா விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு முழு மகசூல் கிடைக்கவில்லை. விவசாயிகள் கடன் வாங்கி தான் குறுவை சாகுபடி செய்தனர்.
திமுக அரசு விவசாயிகளை வஞ்சித்துள்ளது. திமுக ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டது. மக்களுக்கு முறையான பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும். இப்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி முறை அல்ல; தந்திர மாடல் ஆட்சி. அவர் கூறியது இதுதான்.
Discussion about this post