பகல்நேர முக்கிய செய்திகள் | Daytime Headlines 25-08-2024

0

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய திமுக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியதாக… அண்ணாமலை

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய திமுக, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சனாதன தர்மம் ஒழிப்பு மற்றும் முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டிலும் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பார் என்று கூறிய அண்ணாமலை, மக்களின் கோபத்துக்கு ஆளான திமுக நாடகத்தை மாற்றிக்கொண்டதாக குற்றம்சாட்டினார். திமுகவின் இந்த நாடகத்தை முருகப்பெருமான் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

ஆர்வம் காட்டி வருகின்றனர்… பிரதமர் மோடி மன் கி பாத் மூலம் உரை

இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர் பிரதமர் மோடி தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரை. தற்போது இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் எனக்கு பல்வேறு ஆலோசனைகளை அனுப்பியுள்ளனர் என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரை.

இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம்…

இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம். இதில் 33 சதவீதம் பேர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதன்படி, நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 13.8 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அடுத்து மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக 9.1 சதவீதம் பேரும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 4.7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

பாகிஸ்தானில் மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு…

பாகிஸ்தானில் மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ் பேலா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தாக்கில் மோதி விபத்துக்குள்ளானது. ஈரானில் இருந்து 70 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று பஞ்சாப் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது. டெலிகிராம் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் மீது பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஆஜராகாத பாவெல் துரோவுக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது. ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து பாரிஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள லு போர்கெட் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பாதுகாவலர் மற்றும் பெண்ணுடன் வந்த பால் துரோவை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர்.

2 மாதங்களில் மட்டும் 11 லட்சம் பெண்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம்….

2 மாதங்களில் 11 லட்சம் பெண்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது கோலாப்பூர் அரச குடும்பம் போலந்து நாட்டைச் சேர்ந்த பல தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவளித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார், எனவே கோலாப்பூர் மக்களின் சேவை மற்றும் விருந்தோம்பலை கவுரவிக்கும் வகையில் அங்கு நினைவிடம் கட்டப்பட்டது. மத்திய அரசின் திட்டத்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி பெண்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகவும், குறிப்பாக கடந்த 2 மாதங்களில் மட்டும் 11 லட்சம் பெண்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here