WhatsApp Channel
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடிக்கம்பத்தை போலீசார் இன்று நள்ளிரவு அகற்றினர். அதை அகற்றும் போது, போலீசாருக்கும், பா.ஜ., நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன்பு உள்ள 50 அடி உயர பாஜக கொடிக்கம்பத்தில் இன்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அகற்றக்கோரி அப்பகுதி முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
அதன்பின் 200க்கும் மேற்பட்ட போலீசார் வந்து பா.ஜனதா நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் போலீசார் ஜேசிபி கொண்டு வந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், போலீசாரும், பா.ஜ., நிர்வாகிகளும், பா.ஜ.,வினரை தள்ளுமுள்ளு செய்து கைது செய்தனர். அதன்பின், போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றினர். இந்த மோதலில் பாஜக நிர்வாகிக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, பனையூரில் கிளைத்தலைவர் நள்ளிரவில், ஏற்பாட்டில் நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவதைப் போல, பெரும் போலீஸ் படையுடன் கிளம்பினார். திமுக அரசின் உத்தரவின் பேரில் நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த போலீசாரை எதிர்த்து போராடிய சகோதர சகோதரிகள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். எங்கள் கட்சிக்காரர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் திமுக விலை கொடுக்கும், பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றியதால் தமிழகம் வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம். நவம்பர் 1ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் தினமும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
10,000வது கொடி கம்பம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி (100வது நாள்) காவல்துறையின் தடியடியால் சிகிச்சை பெற்று வரும் விவின் பாஸ்கரன் முன்னிலையில் அதே இடத்தில் 10,000வது கொடிக்கம்பம் நடப்படும் என்பதை ஊழல் திமுக அரசுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். கொடி கம்பம் அகற்றப்பட்டது. அண்ணாமலை தெளிவுபடுத்தினார். இதற்காக திமுக அரசு சும்மா இருக்காது என்றும், பாஜக ஒரே இடத்தில் கொடி கட்டி தங்கள் வேலையை செய்யும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இப்போது பா.ஜ.க.வின் கொடிக்கம்பத்தை அவமதித்ததால் தினமும் 100 கொடிக்கம்பங்கள் நடுவேன் என அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். சும்மா இருந்ததை காமெடி ஸ்டைலில் கௌண்டமணி சொறிவது போலவும், மேலும் ஊழலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் திமுக அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலை இத்தகைய அறிவிப்பு பாஜக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், தினந்தோறும் கொடிக்கம்பம் நடும் திமுகவினருக்கு சரியான பதிலடி என்று சமூக வலைதளத்தில் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post