WhatsApp Channel
30 நாட்களில் அமைச்சரவை மாற்றம்? பொன்முடி பரிந்துரைத்த மாற்று.. அந்த எம்எல்ஏ? எல்லாம் மாறும்!
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேவேளை அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கி தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாக்ஷிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2006 முதல் 2011ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, 2011ல், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
வழக்கின் பின்னணி வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், 2016ல் பொன்முடி, அவரது மனைவி விசாலாக்ஷி ஆகியோரை விடுதலை செய்தது.இதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து, கடந்த, 19ம் தேதி தீர்ப்பளித்தார். 19 ஆம் தேதி.
இருவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாக்ஷி ஆகியோர் உடனிருந்தனர். தண்டனை விவரம் குறித்து நீதிபதி அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
தீர்ப்பு என்ன?: அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவக் காரணங்களைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கோரி இருவரின் மருத்துவ அறிக்கையை சமர்பித்தார். மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
30 நாள் சஸ்பெண்ட்: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்களுக்கு பிறகு விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடையவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது பொன்முடி தரப்பு வழக்கறிஞர், 2011-ம் ஆண்டு சட்டத்துறை செயலாளராக இருந்த அவர் (நீதிபதி ஜெயச்சந்திரன்) ஏற்கனவே இந்த வழக்கில் சொத்து முடக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டினார். அதற்கு பதில் அளித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது.
தகுதி இல்லை: இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை காரணம் காட்டி, பொன்முடியின் மனைவி விசாலாக்ஷி, குறைந்த தண்டனை வழங்குமாறு மனு செய்தார். தங்களுக்கு மேலான நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திடம் நிவாரணம் பெறலாம் என்று நீதிபதி கூறினார். தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாக்ஷியும் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மாற வாய்ப்பு உள்ளதா?: 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அதேவேளை அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கி தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் உள்ளார். ஏ.வி.வேலு உள்ளிட்ட அமைச்சர்களிடம் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்படி சீனியர்கள் ஜெயிலுக்குப் போவது.. வழக்குகளில் சிக்குவது.. மூத்த அமைச்சர்கள் பதவி பறிக்கப்படலாம், கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம்.. அதற்கான யோசனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இருப்பதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த அமைச்சர்கள் தொடர் வழக்குகளில் சிக்கியிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இந்த திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக, சிறைக்கு சென்றால் அவருக்கு பதிலாக ஆர்.லட்சுமணனை அமைச்சராக்க வேண்டும் என பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார். ஆர்.லட்சுமணன் தற்போது விழுப்புரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். ராஜ்யசபாவில் அதிமுக சார்பில் தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி 2020ல் திமுகவில் இணைந்தார்.2021ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் என்பதாலும், அவருடன் நெருங்கிப் பழகியதாலும் பொன்முடி அவரை சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.
Discussion about this post